ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)!

படம்கண்ணியமிக்க அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில்:      
 இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. அவனது அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துபவராகவும் இருந்தார்.அவரை அவன் தேர்வு செய்தான்.நேரான வழியில் செலுத்தினான். (அல்குர்ஆன்: 16 : 120-121)
 
அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்…
 
அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
 
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். ‘எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். ‘என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)
 
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்த தாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?
 
இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப்படுத்தப்பட்டது தான்.ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும்.  ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக Continue reading

இஸ்லாமியப் பெண்ணே!

கண்ணியமிக்க படைப்பாளனாகிய அல்லாஹ் கூறுகிறான்:மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.(அல்குர்ஆன் 4:1) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
 பெண்களுக்கு நலவை நாடுங்கள். நிச்சயமாக பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேல்பகுதி மற்றவைகளை விட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர். அதனை அப்படியே விட்டு விடுவீராக! அது  வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலையைக் கடைபிடியுங்கள்) (அபூஹூரைரா (ரலி) புகாரி முஸ்லிம்)
 
பெண் என்பவள் ஒரு குடும்பத்தின், கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறாள். அவளின் குணத்தையும் நடத்தையையும் வைத்தே அவள் சார்ந்த குடும்பத்தையும், பாரம்பரியத்தையும் சமுதாயம் எடை போடுகிறது. நல்ல அங்கத்தினர்களை தனது குடும்பத்திலிருந்து உருவாக்கி சமுதாயத்தில் நடமாட விடும் பொறுப்பும் பங்களிப்பும் பெண் என்பவளுக்கு அதிகம் உள்ளது.
 
 ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே கற்கிறான். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்கிறது என்ற ஒரு அறிஞனின் கூற்றுக்கேற்ப ஒரு பெண் எத்தனை சிறப்பம்சங்களை இறையருளால் பெற்றவளாக இருக்கிறாள் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தவர்களாக உள்ளோம்?
 
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தங்களின் பொறுப்பு, கடமைகளின் எல்லைக்கோட்பாட்டை உணர்ந்த வர்களாக உறுதிக் கொள்ள வேண்டும். தனிமனித வாழ்வானாலும், பொது வாழ்வானாலும் நம்மனைவரின் அதிகபட்ச அக்கறை இறையச்சத்தை மெய்ப்படுத்துவாக இருத்தல் வேண்டும்.
 
அல்லாஹ்வின் மார்க்கம் ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தும் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் மெய்யான சான்றுகளாய் வாழ்ந்து காட்ட வேண்டும். சுதந்திரங்கள் தவறுதலாய் பயன்படுத்துதல் கூடாது.உரிமைகள் வரம்பு மீறுதலாய் ஆகிவிடக்கூடாது.
 
ஒரு பெண் குழந்தையாய் மனைவியாய், தாயாய் பரிணமிக்கும் ஒவ்வொரு நிலையிலும் தனக்குண்டான மார்க்க அம்சங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் அவள் திகழ வேண்டும்.அதைவிட்டு அற்ப காரணங்கள், அற்ப சுகங்களுக்காக அளப்பரிய முழுமையான தன் பருவத்தை பெண்மையை முடிவில் வாழ்வையே தொலைத்துவிடும் அபலையாய் ஆகி விடுகிறாள்.இதனால் அவளும் அவளது சுற்றமும் சமூக அமைப்பும் கூனிக் குறுகிப் போய் விடுகின்றன.
 
கல்வியறிவும், நாகரீகமும் மேன்மையடைந்திருப்பதாய் சொல்லப்படும் இன்றைய உலகில் பெண் என்பவள் போகப் பொருளாகவும், போதைப் பொருளாகவுமே கையாளப் படுகிறாள்.விஞ்ஞான தொழில் நுட்பவளர்ச்சியில் பெண் என்பவள் நவீனமயமாக்கப்பட்ட ஆபாச அடிமையாகவே கிறங்கடிக்கப்படுகிறாள்.தான் அப்படித்தான் கையாளப் படுகிறோம் என்பது பெண்ணுக்குத் தெரியாமலேயே நவீனம் (மாடர்ன்), நாகரீகம் என்று அவளும் சமூகமும் மூளைச் சலவை செய்யப்படுகிறது. 
 
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கைக் கொண்டு Continue reading

விமர்சனங்களை வென்றவர் -முஹம்மது (ஸல்)

கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி  மக்காவில்  அநாதையாக பிறந்தமுஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனிதவரலாற்றில் ஏற்படுத்திய் தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்ட்து.இந்த உலகில் மனித்ராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்தசக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு,அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம்,வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்குதீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. மருத்துவம் கூடஅவரிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது. இன்றும் நபிமருத்துவம்என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாகஇடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல்ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்துமருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம்,நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிறதுறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும்விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர்தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம்எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்துமுஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப்படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள்,அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்துவிட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனைமுயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்றுசொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது.தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாகபின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்தசமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம்வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளைஉத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறதுஎன்று சொன்னால் மட்டுமே முஹம்மது (ஸல்) பற்றி சுருக்கமானஅறிமுகம் முற்றுப் பெரும்.
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்றதத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்றதலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம்இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி,போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள்என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவநாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை  பின்பற்றுகிறஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின்சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மதுநபி (ஸல்) பாராட்டப் படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும்கண்டங்கள் அத்தனையும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்துயோசிக்க வேணும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனைமுதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதைதடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால்பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்றுமுஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாகவிரும்பவில்லை என்கிறான்.
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரிமாணவி  நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால்.இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட்வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப்பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின்அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது(ஸல்) என்று பெயர் சொல்லப் படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன்தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான்.காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கைநிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன்பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப்பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறிஅவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்றுகேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவாஅது என்று அவன் பதிலளிக்கிறான்.
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும்மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசிவிற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும்வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின்வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம்.இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும்முறைய்யற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக்கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்  அமரிக்க விமானங்களில்இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோநாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும்தொழுகைகாக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேசஅளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம்அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டிஉயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹ்ம்மது என்றபெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக்கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்தியவெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும்.
அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதைவிட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்குமக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணுஅளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
ஒரு விவாதத்திற்கான ஜன்னலில் அந்த பேரொளியின் தரிசனம்உங்களுக்கு வாய்க்குமெனில் நீங்கள் அவரின் பக்கத்தில் ஒருபோராளியாக மாறிவிடுவீர்கள்.
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தைநேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர்என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒருகவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்டவந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மறிவிடவில்லையா?எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தைஅமைத்துக் கொண்ட்து தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.
முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களதுஉறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில்செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக்கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி(ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம்தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.
முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபாஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர்குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்தமலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படைவரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்பு வீர்களா?என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறுபத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னாஅலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர்என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர்.தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக்கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தைஎடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாய என்றுகடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின்நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.
வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதானஎதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்றுகூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ளமுடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபிவாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரதுவாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.
இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாகமக்காவின் மக்கள் பெருமானாரைப் பற்றி,  கவிஞராக இருப்பாரோ!மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்தபிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக்கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.
மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள்நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவேதன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாகபழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும்மறுத்தார். முஹம்மது விடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றுஅனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள்கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர்.வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச்சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மாஅன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூபாதில்)
ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சிதோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்தபொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.
தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும்நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்றுசேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூடமுஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.
ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்குபரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது,அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்துவந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்குநபிகள நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது.அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள்பழி கூறி ஒரு வார்த்தை  கூறவில்லை.
முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்தபொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.
ஆனால் பெருமானாரின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும்முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாகஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையானதூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்குநாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்-பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மைஅற்றவர் என்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளைஅனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர்.கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்குஇன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறுஉதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்குகொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும்இல்லை.  ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மனவிகாரத்தின் வெளிப்பாடாக அமைந்த்தே தவிர,  அதில்ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்த்தே தவிர அதிலஉண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராககிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும் பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறியகுற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவேஇல்லை.
முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப் படி, அவருக்கு எதிரான்குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது.
முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில்சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத்தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிறசிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள்முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாகஅமைந்தன.
முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில்சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிறசிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொருகோணத்தில் வாழ்வியல் ரிதியான எதர்ர்த்தமான பதில்களாகஅமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என்எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவைஅமைந்திருந்தன.
மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின்வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்த்தோஅதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மதுநபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாகஅமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தைஅம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒருதூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்தகாலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்தசிந்தனையாளரும்  அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றிதொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம்பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர்.அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.  கார்லைல் தனது உரைகளுக்கு கவிதைகதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும்,கதாநாயக  பாதிரியாராகக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கியஎழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராகநெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமானகருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8 ம் தேதி வெள்ளிக்கிழமைஅன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில்உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின்பட்டியலிலிருந்து  மோஸேவையோ இயேசுவையோதேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்)அவர்களை  தேர்வு செய்தார்.
வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதுவெறுப்புக் கொண்டிருந்த்து. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்ததுஎன்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பியமக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.  
“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்றுநையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்றடச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையைதொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.
இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒருஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏறபது எந்த நாகரீகமானபிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,
Hugo Grotius கற்பனையாகவும்  கிறுக்குத்தனமாகவும் சொன்னகதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து.முஹம்மது சில புறாக்களை வளர்த்தார்,அந்தப் புறாக்களுக்கு அவர்நல்ல பயிற்சி கொடுத்தார்.அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்துஅவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும்,அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் எனமுட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன்மட்டுமல்ல  கிருத்துவ உலகத்தைச் சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும்இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமானகற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம்பேசியும் வருகிறார்கள்.  இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத்தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களைநம்பி, பேசி,  அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம்அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள்நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக்கூறினார்.
“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம்உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிரஒருபோதும் அவருக்கல்ல.”
தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம்,உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல்,நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.
முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்குஇஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்தஏழை கண்தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்திஇடைமறித்து பேசினார்.  நபிகள் நாயகம் முகம் சுளித்தார்.அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்றகருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.
அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம்வருகிற போது  அவரை “நான் கண்டிக்கப் பட காரணமாகஇருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அழைப்பார்கள். பெருமானார் வெளியூர்களுக்குச் சென்றநேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின்பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளைஎடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின்உளத்தூயமையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்றுகூறினார்.
நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லைஅற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒருநியதியை எடுத்துவைத்தார்.
முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி  மக்கள்நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்கமுடியாதுசரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம்விழுந்து விடும்மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்துவைக்க முடியாதுபொய் சீக்கிரமே வெளுத்து விடும்.
ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை பெருமானார் (ஸல்)அவர்களது திருமணங்களை  கொச்சைப் படுத்தி வருகிறது.அவரை பெண்ணாசை கொண்டவராக   சித்தரிக்க முயல்கிறது.வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம்  சார்ந்ததிருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.
இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றையபாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச்சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக்காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹமது(ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும்மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார்.
பெருமானாரின் சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்குகாரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும்உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பலபெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்மாக, குறைகாணப்படாததாக இருந்த்து. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒருமனைவியுடனேயே வாழ்ந்தார்.
நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவதுதிருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதைகடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும்தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பலபெண்களை பெருமானார் நாசூக்காக ஏற்க மறுத்த்தை வரலாறுகாட்டுகிறது. பெருமானாரின் மற்ற திருமணங்கள்ஒவ்வொன்றுக்கும் அரசியல் அல்லது சமூக அல்லது சமயநணமை ஒன்று காரணமாக இருந்தது.
பெருமானாரின் கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரைபெருமானார் திருமணம் செய்து கொண்ட்து முஸ்லிம்களுக்குஅரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில்இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின்வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமைதழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ்(ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளைநம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில்காரணமாக  இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத்(ரலி) அவர்களின்  சித்தியாவார்.
தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில்பெருமானார் (ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.
“முஹ்ம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் செல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளியஇருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்திகொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியாலவாடிய வாழ்க்கை அவருடையது”
சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம்,வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவைசிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவைஎதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில்கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.
முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப்போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களாலதாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹமது (ஸல்)பலயுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தைபரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்தஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்துவிட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.
உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார் ? அதைதடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரதுவரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித்தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால்புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும்திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.
ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்துகாட்டப் படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில்கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைகாது. அந்தப் புனிதவாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள்இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.
யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது.சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகையநிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம்செய்தார்.
போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத்தலைவர் முஹம்மது (ஸல்)  ஒருவராகத்தான் இருக முடியும். ஹிஜ்ரி 5 ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர்சொன்னார். எதிர்களை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம்அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக்கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்கஅவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்!அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.
இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணக்ளும்குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறிபார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவைஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை  ஏவுகணை வீசிஅழித்தது.
முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளைசட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர்,முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்குகுழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது.யாரிடமும் சண்டையிடுவதற்கு அவர்களிடம் நியாயம் பேசவேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது.விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது(ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.
முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார்என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போதுஅவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்டஒழுங்கையும் சேர்ந்து கவனிக்க வேண்டும்.
முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார்என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார்.“ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏறக் முஹம்மதுநிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பைவரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம்விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923   )
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடைபோடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற  அநதமகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவேசெய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்றுதாமாகவே கூறுவர். – ஜி.ஜிகெல்லட்  கூறுவதை கேளுங்கள்!
“ இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம்தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை.அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளைஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்றஎதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்தஅனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.
ஏனென்றால்
அந்த வாழ்வில்
·         கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
·         நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
·         ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
·         பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
·         சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
·         நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
·         பொது நன்மைக்கு எதிரான் ஒரு சிந்தனை இல்லை
·         சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
·         சகிப்புத்தன்மைக்கு எதிரான் ஒரு உத்தரவில்லை
·         சிறுபான்மையினருக்கு எதிரான் ஒரு சூழ்ச்சி இல்லை
·         மொத்தமாக சொல்வதானால்
·         சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.
  துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டுஉண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்றுவரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒருசரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போதுநிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்றுஅவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்துமனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள்நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.  என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான  – எஸ். எச். லீடர்  (-S.H. Leeder –Modern Sons of the Pharaohs)
thanks:

COVAI ABDUL AZEEZ BAQAVI

அமெரிக்கக் கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம் !

   எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு.
இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம்.

“அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்….

“இறைவா நீ இருந்தால்…”

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை Continue reading

கஞ்சனும், வள்ளலும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பி­ருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி­)  நூல்: புகாரி (1444)
 
நாம் இன்று உலகில் கண்கூடாகப் பார்க்கக் கூடிய உண்மையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதாரணமிட்டுக் கூறியுள்ளார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், பணத்துக்காகக் கொலை செய்பவர்கள் உருவாவதற்குக் காரணம் ஏழைகளுக்கு உதவாமல் செல்வத்தைச் சேமித்து வைத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள் தான். செல்வத்தைச் சேமித்து, தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ விரும்புகிறாôகள். ஆனால் அது அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. இதற்கு இரும்பு அங்கி நெறிப்பதை அழகிய உதாரணமாகக் கூறியுள்ளார்கள். தர்மம் செய்பவன் யாரும் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனது கிடையாது. மாறாக அவருக்கு அதை விடவும் செல்வம் வளரும் என்பதற்கு இரும்பு அங்கியை தரையில் இழுத்துச் செல்வதை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கஞ்சத்தனம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது. தங்களில் உள்ளவர்களை தாங்களே கொலை செய்வதற்கும் ஹராமானவைகளை ஹலாலாக்குவதின் பக்கம் அவர்களைக் கொண்டு சேர்த்ததும் இந்தக் கஞ்சத்தனம் தான்.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­லி)  நூல்: முஸ்லிம் (4675)
 
கஞ்சத்தனம் செய்பவர்கள் இவ்வுலகில் பல விதமான தீய காரியங்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து ‘நான் உனது செல்வம்; உனது கருவூலம்’ என்று சொல்லும்” என்று கூறிவிட்டு, ”கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே! மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” (3:180) என்ற வசனத்தை ஓதினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி (1403)
 
கஞ்சன் இவ்வுலகிலும் மறுமையிலும் இது போன்று நிம்மதியற்றவனாக Continue reading

பாவத்தை கழுவும் தொழுகை

”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். ”அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். ”இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)
உடலை அழுக்கி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45) 

இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.
இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ”(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்” என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50
நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் Continue reading

குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்

                          நிலவின் ஒளி பிரதிபலிப்பு

நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…

تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا

வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61

திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.

சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا

“அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்” سورة يونس 10:5

أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح

நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றே !

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ 160

6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன்,நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.

மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான். திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.

Continue reading

”அல்லாஹ்வு​க்காக அழகிய கடன் வழங்கும் திட்டம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்….
73:20. …தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

”இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார்.

எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!” என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!” என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்…என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். நூல்:புகாரி 2291.
Continue reading

அறிவுக்கு விருந்து!!

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.

***பூமியின் நீர்ப்பரப்பு:  139,440,000 சதுர கி.மீ

***பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ

***பூமியின் விட்டம்: 7920 கி.மீ

***பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ

***பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ

***பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு

***பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி

***பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக

***பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 விநாடிகள்

***சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்”  ஏற்படும் அதாவதுஅமாவாசையில் வரும்

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் — ஆராய்ச்சி கருத்து .